WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>>

வியாழன், 4 ஜூலை, 2013

உன் துணையின்றி நான்.....!!!

உன் துணையின்றி நான்.....!!!

தேனும் தெளிதேனும் இருந்தும்
அது எனக்கு இனிக்கவில்லையடி 
என்னவளே நீ என்னருகில் இல்லாமல்...

பஞ்சணையும் சுக
தலையனையும் கந்தவர்க்க
மணமிருந்தும்.....

மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட 
மெல்லிய மெத்தை 
வெள்ளைப்போளம் இருந்தும்....


மதிமயங்கும் மது இருந்தும்
நம்மை காண நிலா காத்திருந்தும்
இருளின் மேகங்கள் சுற்றி வந்தும்...

திரளான கப்பல்கள் 
தினம்தோறும் வந்து என்னை பார்த்து
கேலி செய்கிறது...


ஆயிரம் நறுமணம் 
கமழும் பூக்கள் இருந்தும் 
என் மஞ்சம் அந்த பூக்களை நெருங்க விடவில்லை...

உன்னைப்போல பெண்ணை 
நான் இதுவரை கண்டதில்லை 
என்றேன்....

உன் கண்கள் அழகாக 
இருக்கிறது என்றாய் 
என் கண் மூலம் காதலை கண்டவளே....

வெண்ணிலவே என்றேன்
நிலவில் கருப்பாக 
தெரிவது நீ என்றாய்....


தென்றலே என்றேன்
அதில் ஆடும்
மரம் நீ என்றாய்....

தேன்மொழியே என்றேன்
அங்கே பேசும்மொழி
நீ என்றாய்...

கனியே கனியமுதே
என்றேன்
அதின் விதை நீ என்றாய்...

எப்போதும் என் கனவில் 
நீ என்றேன்
அந்த கனவே நீ என்றாய்...


இனிக்கும் மாம்பழமே என்றேன்
அதுதான்
நீ வண்டாக வந்துவிட்டாயோ என்றாய்...

நீயில்லாமல் கண்ணீரின்
துணை கொண்டு வாழ்கிறேன் என்றேன்
அந்த கண்ணீரே நான்தான் என்றாய்...

எத்தனையோ சுகங்கள்
என்னருகில் என்னை மயங்க வைத்து இருந்தும்
என் மஞ்சம் வெறுமையாக, நீ இல்லாமல்......!!!!

டிஸ்கி : ஹா ஹா ஹா ஹா என்னாது யுத்தமா....?  சிப்பு சிப்பா வருது அண்ணே.....நான் சொன்னது ஈராக் அமெரிக்கா யுத்தத்தை ஹீ ஹீ ஹீ ஹீ.....[[எலேய் நீயும் உள்குத்தா டிஸ்கி போடுறியே மனோ]]





Thursday, December 15, 2011

உன் நினைவு என்னை சுடுகிறது....!!!



உன் நினைவு
சுடுகிறது தீயாய்
குளித்தாலும்
குடித்தாலும் தாகம்
தணியவில்லையடி...
உன்னை மறக்க
நினைக்கும் நினைவலைகள்
உன்னோடு சாம்பலாகி விட்டதோ
ஆழியில் கரைந்து விட்டதோ...
உன்மத்தம் பிடித்தவனாய்
இருப்பது போல் உணர்கிறேன்
உன் நினைவின் நிறைவு
என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...
எனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாயே
அந்த கணம்
என்னுயிரும் போகாமல் காத்தவளே....
உன் நினைவை சுமந்து
தினம் தினம்
நான் எரிந்து போவதற்கா
என்னை உயிரோடு வாழ விட்டாய்....
நீ வாங்கிய சத்தியம்
என்னில் எரிமலையாய்
அது நான் உறங்கும்
கல்லறையிலும் தொடரும்...
இதற்க்கு [நமக்கு]
சாட்சியாக அந்த
ஒற்றை பனை மரம்
ஜீவித்தும்  இருக்கும்....

உன் நினைவில் என்றும் நான்......


அடிக்கடி வந்து போகிறவள்.....!!!!

வசந்தமாய் வந்தாள்
என்னைத்தேடி....


பூக்களை அள்ளி தெளித்தாள் 
என்மீது.....


மலர்களின் நறுமணத்தில்
மயங்கிப்போனேன்....


மலர்களின் இளவரசி நீ
உன்னை விட பூக்கள் அழகு அல்ல எனக்கு...


பூந்தோட்டத்தில் ராஜாங்கம்
நடத்தும் மகாராணி நீ...


பூவின் உடல் பளபளப்பின்
கண்ணாடியில் என்னை மறந்தேன்...


பூங்காவிற்கு அழைத்து சென்றாய்
கடற்கரைக்கு அழைத்து சென்றாய்...


காதல் மொழிபேசி 
என்னை உன்னில் சாய்த்தாய்...


பூ இதழ்களால் என்னை வருடி
மணம் கோர்த்து மகிழசெய்தாய்...


பாய்ந்து வரும் நதிக்கு
கடலும் வழிவிட்டு சங்கமித்தது....


ஏனடி பூ"ந்"தேவதையே 
கனவில் மட்டும் வந்து, ஏன் என்னை இம்சிக்கிறாய்...!!!

டிஸ்கி : வெஸ்டன் யூனியன் பேங்கில் எனக்கு லாட்டரி அடித்து, பல்பு வாங்கியதை நாளை சொல்றேன் ஹி ஹி எலேய் தக்காளி, நீ சிரிக்கிறது இங்கே வரை கேக்குது ராஸ்கல்...



தங்கச்சி பாப்பாவுக்கு இன்று பிறந்தநாள்...!!!

ரோஜாப்பூ வாசம்
மல்லிகைப்பூ வாசம்

முல்லைப்பூ வாசம்
கிராந்திப்பூ வாசம்

செண்பகப்பூ வாசம்
செந்தாழம்பூ வாசம்

தாமரைப்பூ வாசம்
குருஞ்சிப்பூ வாசம்


லில்லிப்பூ வாசம்
மகிழம்பூ வாசம்

கிச்சிலிப்பூ வாசம்
அணிச்சம்ப்பூ வாசம்

கனகம்ப்பூ வாசம்
ஊதாப்பூ வாசம்

எல்லா வாசத்துக்கும்
மேலானது உன் பாசம்...!!!

என் தங்கச்சி பாப்பா'ம்மாவுக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....


என்னோடு சேர்ந்து விண்மீன்களும், தேவதை உன்னை வாழ்த்துகிறது....!!!


டிஸ்கி : அன்பு தங்கை, கல்பனா ராஜேந்திரனுக்கு இன்று பிறந்தநாள்....!!!
http://kalpanarajendran.blogspot.com





அரசன் என்பவன் [[ள்]] புளியம்பழம் போல இருக்கவேண்டும்....!!!???

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.
அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.
""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்....!!!


ஒரு ஜோக்...

காலையில் நாயை கையில் பிடித்து வாக்கிங் வருபவரிடம் ஒரு குடிகாரன்...

குடிகாரன் : என்ன காலையிலேயே ஒரு கழுதை கூட வர்ற...
வாக்கிங் வந்தவர் : உனக்கு கண்ணு தெரியலையா அது நாய்'டா வெண்ணை...
குடிகாரன் : நான் கேட்டது நாய்'கிட்டேடா டுபுக்கு....



கவிதை

கனவிலே தேவதை!
காதல் ரசம் பொழிந்தாள்!
உருகியது என் ரத்த நாளங்கள்..

நான் ரசித்த நிஷாராமின் கவிதை

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
 சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
 விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
 ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
 குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
 கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
 உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
 பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
 இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
 ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
 போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்




திங்கள், 18 பிப்ரவரி, 2013

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது - உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது!


18  January  2013  08:11:22 AM  படித்தவர்கள்: 134
செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது - உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது!உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.
ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.

போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.

ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில் உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
nk

இதழ் சொல்லும் ரகசியம் தெரியுமா...?

மேலும் சில முக்கிய செய்திகள்....
  உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே  (18/02/2013) 
  வீட்டுல போரடிக்குது, வெளியில வச்சுக்கலாமா..?   (17/02/2013) 
  ஆண்களுக்கு 37 வயதில் மகிழ்ச்சி! பெண்களுக்கு 30 வயதில் மலர்ச்சி!!   (17/02/2013) 
  பெண்களை விட ஆண்கள்தான் ரொமான்ஸில் சூப்பராம்...!  (15/02/2013) 
  திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கீங்களா?   (14/02/2013) 
  தாம்பத்யத்தில் கேட்கத் தயங்கும் சந்தேகங்கள்...!   (13/02/2013) 
Published news:
  மெதுவா மெதுவா தொடலாமா...?   (11/02/2013)
  என்ன சத்தம் 'அந்த' நேரம்...!   (11/02/2013)
  செக்ஸுக்கு 'சாக்லேட்' ஓ.கே.!   (11/02/2013)
  பெண்களிடம் ஆண்கள் ரொம்ப ரசிப்பது என்ன தெரியுமா...?   (11/02/2013)
  சரியாக விளையாடாவிட்டால் எப்படி...?   (11/02/2013)
  பார்ததும் காதல் பத்திக்கிச்சா??   (10/02/2013)